செய்திகள்
தற்கொலை

வடவள்ளியில் வேலை கிடைக்காததால் பட்டதாரி வாலிபர் தற்கொலை

Published On 2021-06-19 09:15 GMT   |   Update On 2021-06-19 09:15 GMT
கோவை வடவள்ளியில் வேலை கிடைக்காததால் மனவேதனை அடைந்த பட்டதாரி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை:

கோவை வடவள்ளி கல்வீராம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முக சுந்தரம் (வயது 23). எம்.பி.ஏ. பட்டதாரி. இவர் வேலை தேடி வந்தார். சரியான வேலை கிடைக்காததால் சண்முகசுந்தரம் வேதனையில் இருந்தார். இதனால் மனம் உடைந்த சண்முகசுந்தரம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News