செய்திகள்
கொரோனா வைரஸ்

திருவையாறு பகுதியில் 12 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2021-05-14 09:23 GMT   |   Update On 2021-05-14 09:23 GMT
திருவையாறு பேரூராட்சி பகுதியில் 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 12 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

திருவையாறு:

திருவையாறு பேரூராட்சி பகுதியில் 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 12 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

தகவல் அறிந்த தாசில்தார் நெடுஞ்செழியன், ஒன்றிய ஆணையர்கள், கணேசன், நந்தினி, வருவாய் ஆய்வாளர்கள், சாந்தி, மஞ்சு, பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா, துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார், நடுக்காவேரி அரசு மருத்துவமனை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சதாசிவம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆய்வு செய்து கிருமி நாசினி தெளித்தனர். தொற்று ஏற்பட்ட குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து கொள்ளவும் அறிவுரை வழங்கினர்.

Tags:    

Similar News