செய்திகள்
விபத்து பலி

கோவை அருகே விபத்து- வாலிபர் பலி

Published On 2021-04-28 10:57 GMT   |   Update On 2021-04-28 10:57 GMT
கோவை அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை தெற்குபாளையம் அருகே உள்ள மகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் நந்தகுமார் (வயது 23). கூலித் தொழிலாளி.

இவரது நண்பர் சதீஸ்குமார் (23). இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் கோவை- மேட்டுப்பாளையம் ரோட்டில் சென்றனர்.

மோட்டார் சைக்கிளை நந்தகுமார் ஓட்டிச் சென்றார். நரசிம்ம நாயக்கன் பாளையம் அருகே சென்ற போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே நந்தகுமார் பரிதாபமாக இறந்தார்.இது குறித்து பெரிய நாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News