சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது
சென்னை:
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்தபடி உள்ளது. தினசரி பாதிப்பு 4 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. நேற்று மட்டும் புதிதாக 3,789 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இன்றைய நிலவரப்படி 30 ஆயிரத்து 401 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் நோய் தொற்று பரவலில் தேனாம்பேட்டை மண்டலம் முதல் இடத்தில் உள்ளது. இங்கு மட்டும் அதிகபட்சமாக 3,238 பேர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
இதற்கு அடுத்த இடத்தில் அண்ணாநகர், திரு.வி.நகர், கோடம்பாக்கம், தண்டையார்பேட்டை மண்டலங்கள் உள்ளன. மண்டலம் வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் விபரம் வருமாறு:-
திருவொற்றியூர்-756, மணலி-357, மாதவரம்-1,185, தண்டையார்பேட்டை-2,163, ராயபுரம்-2,608, திரு.வி.க. நகர்-2,838, அம்பத்தூர்-2,253, அண்ணாநகர்-3,208, தேனாம்பேட்டை-3,238, கோடம்பாக்கம்-2,616, வளசரவாக்கம்-1,582, ஆலந்தூர்-1,447, அடையாறு-2,129, பெருங்குடி-1,591, சோழிங்கநல்லூர்-871.