இந்தியா

போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட 6.80 லட்சம் செல்போன் இணைப்புகளை துண்டிக்க நடவடிக்கை

Published On 2024-05-24 01:55 GMT   |   Update On 2024-05-24 01:55 GMT
  • போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட செல்போன் இணைப்புகள் குறித்து தொலைத்தொடர்புத்துறை ஆய்வு நடத்தியது.
  • செல்போன் இணைப்புகளை 60 நாட்களுக்குள் சரிபார்க்கும் பணியில் ஈடுபடுமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களை தொலைத்தொடர்புத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

புதுடெல்லி:

செல்போன் அழைப்புகள் மூலம் ஆன்லைன் மோசடிகள் மற்றும் இணையதள குற்றங்கள் நடப்பது அதிகரித்துள்ளது.

இந்நிலையில், போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட செல்போன் இணைப்புகள் குறித்து தொலைத்தொடர்புத்துறை ஆய்வு நடத்தியது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடத்தப்பட்ட ஆய்வில், 6 லட்சத்து 80 ஆயிரம் செல்போன் இணைப்புகள் மோசடியாக பெறப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

அதாவது, போலியான அடையாள ஆவணங்கள், முகவரி ஆவணங்கள், சுயவிவர ஆவணங்களை பயன்படுத்தி, இந்த செல்போன் எண்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதனால், அந்த செல்போன் இணைப்புகளை 60 நாட்களுக்குள் சரிபார்க்கும் பணியில் ஈடுபடுமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களை தொலைத்தொடர்புத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

அப்படி சரிபார்ப்பு நடவடிக்கையில் ஈடுபடாவிட்டால், அந்த செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று கூறியுள்ளது.

Tags:    

Similar News