செய்திகள்
மு.க.ஸ்டாலின்

ஓய்வுக்காக குடும்பத்தினருடன் மு.க.ஸ்டாலின் இன்று கொடைக்கானல் வந்தார்

Published On 2021-04-16 07:37 GMT   |   Update On 2021-04-16 07:37 GMT
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் கொடைக்கானல் வருகை குறித்து பெரும்பாலான கட்சி நிர்வாகிகளுக்கு தெரியவில்லை. அவரது வருகையை அறிந்தஉடன் பாம்பார்புரத்தில் ஏராளமான தி.மு.கவினர் குவியத்தொடங்கினர்.

கொடைக்கானல்:

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு கடந்த சில வாரங்களாக சென்னையில் தங்கி கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் வெற்றி குறித்து ஆலோசனை மேற்கொண்டார். தற்போது ஓய்வுக்காக தனது குடும்பத்தினருடன் இன்று கொடைக்கானல் வந்தார்.

இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்து பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் சென்றார். மு.க.ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா, மருமகள் கிருத்திகா, மகள் செந்தாமரை மற்றும் பேரன் பேத்திகள் ஆகியோரும் வந்தனர். இவர்கள் அனைவரும் பாம்பார்புரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான பங்களாவில் 2 நாட்கள் ஓய்வெடுப்பார்கள் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஸ்டாலின் வருகை குறித்து பெரும்பாலான கட்சி நிர்வாகிகளுக்கு தெரியவில்லை. அவரது வருகையை அறிந்தஉடன் பாம்பார்புரத்தில் ஏராளமான தி.மு.கவினர் குவியத்தொடங்கினர்.

Tags:    

Similar News