செய்திகள்
விபத்து

ஒரகடம் அருகே லாரி மோதி முதியவர் பலி

Published On 2021-04-01 11:01 GMT   |   Update On 2021-04-01 11:01 GMT
ஒரகடம் அருகே லாரி மோதி முதியவர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் தப்பி ஓடிய கன்டெய்னர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
படப்பை:

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த மாத்தூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 74). இவர் கடந்த 29-ந்தேதி ஸ்ரீபெரும்புதூர் சிங்கபெருமாள் கோவில் சாலையில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். ஒரகடம் கூட்டு சாலை அருகே செல்லும்போது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சக்கரவர்த்தி படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையிலான போலீசார் சக்கரவர்த்தியை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சக்கரவர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கன்டெய்னர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News