செய்திகள்
திருட்டு

விழுப்புரம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

Published On 2021-03-20 12:24 GMT   |   Update On 2021-03-20 12:24 GMT
விழுப்புரம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:

விக்கிரவாண்டி தாலுகா பூங்குணம் யாதவர் தெருவில் வசித்து வருபவர் நாகராஜ் மகன் அருண் (வயது 24). இவருடைய தந்தை நாகராஜ் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக இறந்த பின்னர் உறவினர் வீட்டில் தன்னுடைய தாயுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அருணும், அவரது தாயும் வீட்டில் படுத்து தூங்கினர். பின்னர் நேற்று காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உடனே பீரோவை பார்த்தபோது அதில் வைத்திருந்த 4 பவுன் நகைகள் திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்த தகவலின்பேரில் கெடார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருட்டு நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த நகையை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. திருட்டுப்போன நகையின் மதிப்பு ரூ.1 லட்சத்து 25 ஆயிரமாகும். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News