செய்திகள்
மாநகராட்சி பணியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை செல்லூர் மீனாம்பாள்புரத்தை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் (வயது 58). மாநகராட்சி பணியாளர். இவர் முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு 2-வதாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் அவர் கடந்த சில ஆண்டுகளாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் முதல்-மனைவி பல ஆண்டுகள் கழித்து ஜீவனாம்சம் கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனால் மனவருத்தம் அடைந்த முத்துக்கிருஷ்ணன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை செல்லூர் மீனாம்பாள்புரத்தை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் (வயது 58). மாநகராட்சி பணியாளர். இவர் முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு 2-வதாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் அவர் கடந்த சில ஆண்டுகளாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் முதல்-மனைவி பல ஆண்டுகள் கழித்து ஜீவனாம்சம் கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனால் மனவருத்தம் அடைந்த முத்துக்கிருஷ்ணன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.