செய்திகள்
தற்கொலை

மாநகராட்சி பணியாளர் தற்கொலை

Published On 2021-03-02 04:15 GMT   |   Update On 2021-03-02 04:15 GMT
மாநகராட்சி பணியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

மதுரை செல்லூர் மீனாம்பாள்புரத்தை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் (வயது 58). மாநகராட்சி பணியாளர். இவர் முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு 2-வதாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் அவர் கடந்த சில ஆண்டுகளாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் முதல்-மனைவி பல ஆண்டுகள் கழித்து ஜீவனாம்சம் கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனால் மனவருத்தம் அடைந்த முத்துக்கிருஷ்ணன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News