செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை- போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தேவதானப்பட்டி:
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சிக்கந்தர் சவுத்ரி (வயது 30). இவர் தேனியில் தங்கி அதே பகுதியில் உள்ள மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர், 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் தேவதானப்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிக்கந்தர் சவுத்ரியை கைது செய்தனர்.