செய்திகள்
தற்கொலை

சேலத்தில் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-12-31 13:54 GMT   |   Update On 2020-12-31 13:54 GMT
சேலத்தில் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சூரமங்கலம்:

சேலத்தில் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவர் ரெயில்வேயில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மகன் திவாகர் (வயது 21). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் படித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வீட்டின் மேல்மாடியில் உள்ள தனது அறைக்கு நேற்று முன்தினம் இரவு திவாகர் தூங்க சென்றார். ஆனால் நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் அவருடைய தந்தை குணசேகரன் மாடிக்கு சென்று மகனின் அறை கதவை தட்டினார். அப்போது திறக்கவில்லை என்பதால் சந்தேகமடைந்த அவர் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றார். ஆனால் அறைக்குள் திவாகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து அவருடைய உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சூரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

பின்னர் திவாகரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News