செய்திகள்
கோப்பு படம்.

ராணிப்பேட்டையில் நகை வியாபாரி- மனைவிக்கு கத்திக்குத்து

Published On 2020-12-21 15:06 GMT   |   Update On 2020-12-21 15:06 GMT
ராணிப்பேட்டையில் நகை வியாபாரி மற்றும் அவரது மனைவியை கத்தியால் குத்திய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சிப்காட் (ராணிப்பேட்டை):

ராணிப்பேட்டை ஜவுளிக்கடை தெருவை சேர்ந்தவர் சம்பாலால் (வயது 72). நகை வியாபாரி. நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டு கதவை ஒருவர் தட்டியுள்ளார். சம்பாலாலின் மனைவி பார்வதிபாய் (70) சென்று கதவை திறந்துள்ளார். அப்போது அந்த நபர் உங்கள் மகன் எங்கே என்று கேட்டுக்கொண்டே வீட்டுக்குள் நுழைய முயன்றுள்ளார். பார்வதி பாய் தடுக்கவே தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், பார்வதிபாயின் கழுத்தில் குத்தி உள்ளார்.

அலறல் சத்தம் கேட்டு பார்வதியின் கணவர் சம்பாலால் வந்துள்ளார், அவரையும் அந்த மர்ம நபர் கழுத்தில, கத்தியால் குத்தியுள்ளார்.
இதற்குள் வீட்டிலிருந்து அவரது மருமகள் வரவே, மர்ம நபர் தப்பி ஓடிவிட்டான். காயமடைந்த சம்பாலால், அவரது மனைவி பார்வதி பாய் இருவரும் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News