செய்திகள்
கைது

கத்தியை காட்டி மிரட்டி மெக்கானிக்கிடம் பணம் பறித்த வாலிபர் கைது

Published On 2020-12-05 09:26 GMT   |   Update On 2020-12-05 09:26 GMT
மெக்கானிக்கிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை கரந்தை பகுதியை சேர்ந்தவர் அஜித் (வயது 21). இவர் ஒரத்தநாட்டில் கார் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

கரந்தை குதிரைக்கார தெரு அருகே வந்த போது மர்மநபர் ஒருவர், அஜித்தின் மோட்டார் சைக்கிளை மறித்தார்.பின்னர் அவர், அஜித்திடம் கத்தியை காட்டி மிரட்டி சட்டை பையில் இருந்து ரூ.200-யை எடுத்து சென்றார்.

இது குறித்து தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கரந்தை கவாடிக்காரத் தெருவை சேர்ந்த திவாகர்(19) என்பவர் தான் பணத்தை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News