செய்திகள்
மிரட்டல்

வாலிபரை தாக்கி கொலை மிரட்டல்: 2 பேர் கைது

Published On 2020-12-04 05:45 GMT   |   Update On 2020-12-04 05:45 GMT
மதுரை அருகே வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

மதுரை பை-பாஸ் ரோடு, பொன்மேனி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 19). அதே பகுதியை சேர்ந்தவர்கள் பாரதி(21), பிரபாகரன்(23). இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று கார்த்திக் அந்த வழியாக நடந்து வந்தார். அப்போது அவரை பாரதி, பிரபாகரன் ஆகியோர் வழிமறித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து கார்த்திக் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பாரதி, பிரபாகரனை கைது செய்தனர்.
Tags:    

Similar News