செய்திகள்
திமுக

விவசாயிகளுக்கு ஆதரவாக 5-ந்தேதி திமுக போராட்டம்

Published On 2020-12-03 06:03 GMT   |   Update On 2020-12-03 06:03 GMT
டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக தி.மு.க. சார்பில் வரும் 5-ந்தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10.30 மணி அளவில் காணொலி வாயிலாக நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.

அதன்படி, மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக தொடங்கியது.

இக்கூட்டத்தில் வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக தி.மு.க. சார்பில் வரும் 5-ந்தேதி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் 5-ந்தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் காலை 10 மணிக்கு கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News