செய்திகள்
கைது

பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது

Published On 2020-12-01 06:46 GMT   |   Update On 2020-12-01 06:46 GMT
கரூர் அருகே பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:

கரூர் வெங்கமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னத்துரை தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெங்கமேடு பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட சின்ன ஆண்டான்கோவில் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 31) உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.2 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கோயம்பள்ளி அருகே உள்ள அமராவதி ஆற்றுப் பகுதியில் பணம் வைத்து சூதாடிய பரசுராமன் (41) உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News