search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூதாட்டம் கைது"

    • பணம் கட்டி சூதாட்டம் ஆடிய 3 பேரை கையும் களவுமாக பிடித்து கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
    • கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர்.

    கூடுவாஞ்சேரி:

    கூடுவாஞ்சேரி அருகே தைலாவரத்தில் உள்ள வசந்தம் ஹோம்ஸ் குடியிருப்பில் பணம் கட்டி சூதாட்டம் ஆடுவதாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில், கூடுவாஞ்சேரி போலீஸ் எஸ்.ஐ. யோகானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர், பணம் கட்டி சூதாட்டம் ஆடிய 3 பேரையும் கையும் களவுமாக பிடித்து கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். விசாரணையில், அவர்கள் தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் சீனிவாசா நகரை சேர்ந்த திருநாவுக்கரசு (42), வண்டலூர் அடுத்த ஓட்டேரியை சேர்ந்த நந்தகுமார் (40), பெருங்களத்தூர் பாரதி மெயின் ரோட்டை சேர்ந்த சேகர் (44) என தெரியவந்தது.

    மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி அவர்களை அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடமிருந்து ரூ.1,800 பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • ஊட்டி மத்திய போலீசார் விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
    • ரூ.65 ஆயிரத்து 735 மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது

    ஊட்டி,

    ஊட்டியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஊட்டி மத்திய போலீசார் அந்த விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடியதாக காந்தல் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், சசிகுமார்(வயது 43), தியாகு(44), கணேஷ்(46), முத்தோரைைய சேர்ந்த ஈஸ்வரன்(54), பாலகிருஷ்ணன்( 45), குமார்(42), ஊட்டியை சேர்ந்த யூசுப்(51), அபுதாகீர்(48), மற்றொரு சசிகுமார்(45), பாபு(51), முகமது இப்ராகீம்(43), மற்ெறாரு குமார்(35), வெலிங்டனை சேர்ந்த லட்சுமணன், அணிக்கொரையை சேர்ந்த துரை(51), தலைகுந்தாவை சேர்ந்த மணிகண்டன்(40), எமரால்டு பகுதியை சேர்ந்த சிவகுமார்(37) ஆகிய 17 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.65 ஆயிரத்து 735 மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×