search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 ARRESTED FOR GAMBLING WITH MONEY"

    • ஊட்டி மத்திய போலீசார் விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
    • ரூ.65 ஆயிரத்து 735 மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது

    ஊட்டி,

    ஊட்டியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஊட்டி மத்திய போலீசார் அந்த விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடியதாக காந்தல் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், சசிகுமார்(வயது 43), தியாகு(44), கணேஷ்(46), முத்தோரைைய சேர்ந்த ஈஸ்வரன்(54), பாலகிருஷ்ணன்( 45), குமார்(42), ஊட்டியை சேர்ந்த யூசுப்(51), அபுதாகீர்(48), மற்றொரு சசிகுமார்(45), பாபு(51), முகமது இப்ராகீம்(43), மற்ெறாரு குமார்(35), வெலிங்டனை சேர்ந்த லட்சுமணன், அணிக்கொரையை சேர்ந்த துரை(51), தலைகுந்தாவை சேர்ந்த மணிகண்டன்(40), எமரால்டு பகுதியை சேர்ந்த சிவகுமார்(37) ஆகிய 17 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.65 ஆயிரத்து 735 மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • ஜெயங்கொண்டத்தில் பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடமிருந்து ரொக்கம் ரூபாய் 2320 பறிமுதல் செய்யப்பட்டது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கீழக்குடியிருப்பு கிராமத்தில் பணம் வைத்து சூதாடுவதாக ஜெயங்கொண்டம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு 4 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடியது தெரிய வந்தது.இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திரன், சந்திரமோகன், ராஜேந்திரன், செல்வராஜ் என்பது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து 108 சீட்டுக்களையும், ரொக்கம் ரூபாய் 2320 பறிமுதல் செய்து 4 பேர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×