search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gambling arrest"

    மதுரை அருகே பணம் வைத்து சூதாடிய 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை:

    மதுரை அருகே உள்ள ஒத்தக்கடை மங்கலக்குடி சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு கிளப்பில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    போலீசாரை பார்த்ததும் சூதாடிய நபர்கள் தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    சூதாடியதாக ஜவகர் புரத்தைச் சேர்ந்த சின்னசாமி (50), அடைக்கலம் (46), ஒத்தக்கடையைச் சேர்ந்த பாலமுருகன் (43), வெள்ளையன் (38), சரவணன் (40), பரமசிவன் (43), செந்தில் நாதன் (30), முனீஸ்வரன் (33), மூர்த்தி (52), கஜேந்திரன் (59), பாண்டியராஜன் (57), ரவிச்சந்திரன் (49) ஆகிய 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் குறித்து ரூ.86 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    பாவூர்சத்திரம் அருகே சண்டை கோழி வைத்து சூதாடிய 11 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாவூர்சத்திரம்:

    பாவூர்சத்திரம் அருகேயுள்ள மடத்தூர் வென்னியூரை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் முனீஸ்வரன் (வயது 35). இவருக்கு சொந்தமான மாட்டு தொழுவம் அங்குள்ள ஆவரந்தாகுளம் பகுதியில் உள்ளது. அங்கு சண்டை கோழி வளர்த்து வருகிறாராம். இந்த நிலையில் அங்கு சண்டை கோழிகளை வைத்து சூதாட்டம் நடப்பதாக பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் மாணிக்கராஜ், ரெபின் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு சண்டை கோழிகளை வைத்து சூதாடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 4 சண்டை கோழிகள், ஊக்க மருந்து, ரொக்கம் ரூ.1050-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கீழப்பாவூரை சேர்ந்த மூக்கன் மகன் சுடலைகனி (26), குறும்பலாப்பேரியை சேர்ந்த பால்ராஜ் மகன் சக்திகிருஷ்ணன், பாவூர் சத்திரத்தை சேர்ந்த ஆதம்ஜெமினி மகன் டேனியல் ராஜ் (24), வீ.கே.புதூரை சேர்ந்த பூவலிங்கம் மகன் சந்தனராஜ் (24), திருமலைசெல்வன் மகன் சீதாராமன் (24) ஆயிரப்பேரியை சேர்ந்த செய்யது சுலைமான் மகன் அலிகார்கான் (24), மயிலப் புரத்தை சேர்ந்த செல்வ நாயகம் மகன் ஜெயபால் (36), மாதாபுரம் சிவலிங்கம் மகன் ராஜா (23), மகிழ் பால்துரை மகன் முருகன் (24) உள்ளிட்ட 11 பேரை கைது செய்தனர்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்யாறில் காட்டன் சூதாட்ட கும்பல் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrest

    செய்யாறு:

    செய்யாறில் பழைய காஞ்சீபுரம் ரோட்டில் உள்ள ராஜாஜி பூங்காவில் 5 பேர் கும்பல் காட்டன் சூதாட்டம் நடத்தினர். பொதுமக்களை தொந்தரவு செய்து காட்டன் சூதாட்டம் மூலம் மிரட்டி பணம் பறிக்க முயன்றனர்.

    இதுப்பற்றி, செய்யாறு டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார், பூங்காவிற்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் காட்டன் சூதாட்ட கும்பல் தப்பி ஓட முயன்றது. 4 பேரை போலீசார் விரட்டி பிடித்தனர்.

    ஒருவர் தப்பி ஓடி விட்டார். விசாரணையில் அவர்கள், செய்யாறு கொடநகரை சேர்ந்த அப்புனு என்கிற சந்திரபாபு (வயது 33), நேரு நகரை சேர்ந்த காசீம் (48), ஆரணி கூட்ரோடு பகுதியை சேர்ந்த முருகன் (38), சமாதியான் குளத்தெருவை சேர்ந்த தேவேந்திரன் (48) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    4 பேரையும் கைது செய்த போலீசார், தப்பி ஓடிய ஒத்தவாடை பிராமணர் தெருவை சேர்ந்த லோகநாதனை (50) வலைவீசி தேடி வருகின்றனர்.

    பெரம்பூர் அடுக்குமாடி குடியிருப்பில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    பெரம்பூர் டி.டி.தோட்டம் 4-வது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்திருப்பவர் அருண் குமார்.

    இவரது வீட்டில் சூதாட்டம் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து திரு.வி.க.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன், சப்- இன்ஸ்பெக்டர் முபாரக் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது அருண் குமாரின் வீட்டில் சூதாட்டம் நடப்பது உறுதியானது. அவரையும், சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.

    அருண்குமார் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீதர், பூக்கடை ராஜேந்திரன், ஏழுமலை, வெற்றிச் செல்வன், கன்னியப்பன், சிவகுமார், கார்த்திகேயன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.12 ஆயிரம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான ஸ்ரீதர் அ.தி.மு.க. பகுதி துணை செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கயத்தாறு அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகேயுள்ள திருமங்கலகுறிச்சி பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஆதம்அலி தலைமையில் போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது பணம் வைத்து சூதாடிய திருமங்கலகுறிச்சியை சேர்ந்த ராமகிருஷ்ணன், கோதண்டராமன், பெருமாள், மணிகண்டன், வெயிலுமுத்து, சித்திரபாண்டி, அய்யாபுரம் பகுதியை சேர்ந்த காசிப்பாண்டி ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2350 பறிமுதல் செய்யப்பட்டது.

    கயத்தாறு பள்ளிக்கரணை பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் தலைமையில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி மதுவிற்றதாக வடக்குசுப்பிரமணியபுரத்தை சேர்ந்த பெரியசாமி(65) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 11 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மதுரை மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் பணம் வைத்து சூதாடிய 30 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.34 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுரை:

    ஒத்தக்கடை அருகில் உள்ள கீழ கள்ளந்திரி அம்மன் கோவில் திடலில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் டி.எஸ்.பி. புகழேந்தி சம்பவ இடத்தில் சோதனை நடத்தினார். இதில் ரூ. 32 ஆயிரத்து 433 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அரிட்டாபட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 50), கீழ கள்ளந்திரியைச் சேர்ந்த மலையாண்டி (37), சுதாகர் (32), ஜெயராஜ் (28), நாகூர் கனி (39), மணிகண்டன் (33), அசோக்குமார் (42), ஆசைபாண்டி (35), கார்த்திக் (30), சின்னகருப்பன் (40), சரத்குமார் (26), கணேசன் (32), பிரபு (32), மகேந்திரன் (41), அழகன் (24), கண்ணன் (35) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இதே போன்று உத்தப்பநாயக்கனூர் அருகில் உள்ள சின்னகுறவக்குடியில் பணம் வைத்து சூதாடிய போடுவார்பட்டி ராஜேந்திரன் (42), ஜெயம் (43), பாப்பாபட்டி ராஜயோக்கியம் (66), தங்கப்பாண்டி (55), ராஜேஷ்குமார் (30), தவமணி (35), ராஜீவ்காந்தி (32) ஆகியோரை சப்-இன்ஸ்பெக்டர் சிவாஜிகணேசன் கைது செய்தார். அவர்களிடம் இருந்து ரூ.700 பறிமுதல் செய்யப்பட்டது.

    சமயநல்லூர் அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகர் கால்வாய் அருகே பணம் வைத்து சூதாடிய சத்தியமூர்த்தி நகர் சுரேஷ் (33), நீலகண்டன் (25), கண்ணன் (27), குமார் (27), மாரியப்பன் (28), மாரிமுத்து (26), ராமச்சந்திரன் (22) ஆகியோரை சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் கைது செய்தார். இவர்களிடம் இருந்து ரூ.350 பறிமுதல் செய்யப்பட்டது.

    ×