செய்திகள்
திமுக சார்பில் வேளாண் மசோதாவுக்கு எதிராக தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம்
வேளாண் மசோதாவுக்கு எதிராக இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் காஞ்சிபுரத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
சென்னை:
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமீபத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், அதற்கு துணை போகும் அ.தி.மு.க. அரசை கண்டித்தும் தமிழகத்தில் 28-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் தெற்கில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
சென்னை மேற்கில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியும், சென்னை வடக்கில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும், சென்னை தெற்கில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் கலந்து கொள்கின்றனர்.
இதேபோல், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.