செய்திகள்
கைது

கரூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

Published On 2020-07-21 09:46 GMT   |   Update On 2020-07-21 09:46 GMT
கரூர் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:

கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கரூர், வ.உ.சி. தெரு அமராவதி ஆற்றங்கரை பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்த, அதே பகுதியை சேர்ந்த செல்வகுமார் (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 450 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News