செய்திகள்
சாலை பணிகளை அதிகாரி ஆய்வு

நாமக்கல் அருகே சாலை பணிகளை அதிகாரி ஆய்வு

Published On 2020-07-12 10:46 GMT   |   Update On 2020-07-12 10:46 GMT
சேலம் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஜெ.கண்ணன் நாமக்கல் மாவட்டம் பரமத்தி பகுதியில் உள்ள சாலைகளில் 2019-20-ம் ஆண்டிற்கான திட்டம் மற்றும் திட்டம் சாரா பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல்:

சேலம் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஜெ.கண்ணன் நாமக்கல் மாவட்டம் பரமத்தி பகுதியில் உள்ள சாலைகளில் 2019-20-ம் ஆண்டிற்கான திட்டம் மற்றும் திட்டம் சாரா பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல் மழைநீர் வடிகால் கால்வாய் அமைத்தல், குழாய் பாலங்களை அகலப்படுத்துதல், திறந்தவெளியில் உள்ள கிணறுகளுக்கு பாதுகாப்பு சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிகளையும் பார்வையிட்டு, பராமரிப்பு பணிகளுக்கான ஆலோசனை மற்றும் அறிவுரைகளை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது நாமக்கல் கோட்ட பொறியாளர் சசிக்குமார், உதவி கோட்ட பொறியாளர் அசோக்குமார், உதவி பொறியாளர் உமேஷ் மற்றும் சாலை ஆய்வாளர்கள் உடன் இருந்தனர். 
Tags:    

Similar News