செய்திகள்
விபத்து பலி

மெலட்டூர் அருகே விபத்தில் தொழிலாளி பலி

Published On 2020-07-01 12:09 GMT   |   Update On 2020-07-01 12:09 GMT
மெலட்டூர் அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மெலட்டூர்:

மெலட்டூர் அருகே உள்ள இரும்புதலை சந்து தெருவை சேர்ந்தவர் மதுக்குமார்(வயது 27). கூலித்தொழிலாளியான இவர், சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதுக்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மெலட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News