search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளி பலி"

    • பணியில் ஈடுபட்டிருந்த ஏராளமான தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
    • 30 தொழிலாளர்கள் வரை இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    பாட்னா:

    பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் மரிச்சா பகுதியில் கோசி ஆற்றின் மீது பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

    இந்நிலையில் கட்டுமானப்பணியின் போது திடீரென பாலத்தின் பலகை இடிந்து பாலம் உடைந்து விழுந்துள்ளது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த ஏராளமான தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதனால் தொழிலாளர்கள் அலறி துடித்தனர்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததோடு மீட்பு பணியிலும் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள், தன்னாவலர்கள் உதவியோடு மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    இந்த விபத்தில் ஒரு தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். 30 தொழிலாளர்கள் வரை இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


    • தொழிலாளி, வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் கொட்டாரம் அருகே உள்ள குலசேகரபுரம் லட்சுமி புரத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீ லிங்கம் (வயது 54), தொழிலாளி. இவரது மகன் செல்வா (19). நேற்று மாலை தந்தை-மகன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரம் அடைந்த செல்வா, தனது மோட்டார் சைக்கிளை அந்தப்பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றுக்குள் தள்ளி விட்டாராம். இதைதொடர்ந்து அவரது தந்தை ஸ்ரீ லிங்கம், மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக கிணற்றுக்குள் இறங்கி உள்ளார். ஆனால் அவர் தண்ணீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவரை மீட்க அதே பகுதியை சேர்ந்த செல்வன் (34) என்பவர் கிணற்றுக்குள் இறங்கி உள்ளார். ஆனால் அவரும் தண்ணீரில் மூழ்கினார்.

    இதுகுறித்து கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கிணற்றுக்குள் இறங்க முயன்றபோது, கிணற்றுக்குள் விஷவாயு பரவி இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து பாதுகாப்பு உபகரணங்கள் உதவியுடன் கிணற்றுக்குள் இறங்கிய தீயணைப்பு வீரர்கள், ஸ்ரீலிங்கம் மற்றும் செல்வன் உடல்களை பல மணி நேரம் போராடி நள்ளிரவு மீட்டனர். பின்னர் 2 உடல்களும் கரைக்கு கொண்டு வரப்பட்டன.

    கிணற்றுக்குள் தள்ளி விடப்பட்ட மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோல் கசிந்து கிணறு முழுவதும் விஷவாயு பரவி இருந்ததால் ஸ்ரீலிங்கம் மற்றும் செல்வன் மூச்சு திணறி பலியாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் மற்றும் அஞ்சுகிராமம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அதன் பிறகு ஸ்ரீலிங்கம் மற்றும் செல்வன் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து அஞ்சு கிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொட்டாரம் அருகே கிணற்றுக்குள் கிடந்த மோட்டார் சைக்கிளை மீட்கச் சென்ற தொழிலாளி-வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கோவில் விழா படையலில் வைக்கப்பட்ட மது அருந்தியவர் பரிதாபமாக இறந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • சம்பவம் குறித்து கோட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வைத்தியநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவின் போது சுவாமிக்கு படையல் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த படையிலில் உணவுடன், மதுபாட்டில்களும் வைக்கப்பட்டதாக தெரிகிறது.

    பூஜைகள் முடிந்ததும் படையலில் வைக்கப்பட்ட மதுவை, பூசாரி சிலரிடம் கொடுத்துள்ளார். அதனை வைத்தியநாதபுரம் செல்வகுமார் (வயது 49), வடலிவிளை அருள் ஆகியோர் பெற்றுக்கொண்டு அருகே உள்ள சுடுகாட்டுப் பகுதிக்குச் சென்று சாப்பிட்டார்களாம்.

    இந்த நிலையில் அருள் தனது நண்பர்களுக்கு போன் செய்து, மது குடிக்க வந்த விவரத்தையும், அதனை குடித்த பிறகு தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறி உள்ளார். மேலும் உடனே இங்கு வந்து தன்னை காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார்.

    இதனை தொடர்ந்து நண்பர்கள் அங்கு சென்ற போது, அருள் மயக்க நிலையில் இருந்துள்ளார். செல்வகுமார் பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். அவர்களை மீட்டு ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நண்பர்கள் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், செல்வகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    அருள் உடல் நலம் மோசமாக உள்ளதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவில் விழா படையலில் வைக்கப்பட்ட மது அருந்தியவர் பரிதாபமாக இறந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கோட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செல்வகுமார் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முடிவு வந்த பிறகே எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரியவரும்.

    • யானைபுகா அகழிவழியாக முடனாரி புதுப்பாலம் பகுதியில் அவர்கள் சென்றபோது மின்வேலி அமைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர்.
    • ஈஸ்வரனின் உறவினர்கள் அவரது உடலை வைத்து போராட்டம் நடத்தியதோடு வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் வண்ணாத்திப்பாறை காப்பு காட்டில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்து வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்படி கடந்த ஆண்டு அக்டோபர் 28-ந்தேதி கூடலூர் வனவர் திருமுருகன் தலைமையில் வனக்காப்பாளர்கள், வனக்காவலர் அடங்கிய 6 பேர் கொண்ட குழுவினர் 2 குழுக்களாக பிரிந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.

    யானைபுகா அகழிவழியாக முடனாரி புதுப்பாலம் பகுதியில் அவர்கள் சென்றபோது மின்வேலி அமைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். அங்கு சோதனையிட்டபோது மறைந்திருந்த குள்ளப்பகவுண்பட்டியை சேர்ந்த தோட்ட காவலாளியான ஈஸ்வரன் (55) என்பவரை பிடிக்க முயன்றனர்.

    ஆனால் அவர் தப்பி ஓட முயன்றபோது வனத்துறையினரும் விரட்டி சென்று துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஈஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ரேஞ்சர் முரளிதரன் லோயர்கேம்ப் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் ஈஸ்வரன் வனத்துறையினரை கத்தியால் குத்த முயன்றதால் ஏற்பட்ட தகராறில் தற்காப்பிற்காக சுடப்பட்டபோது ஈஸ்வரன் பலியானதாக தெரிவித்தார்.

    ஆனால் ஈஸ்வரனின் உறவினர்கள் அவரது உடலை வைத்து போராட்டம் நடத்தியதோடு வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். மேலும் ஈஸ்வரனின் மகள் மதுரை ஐகோர்ட்டு கிளையிலும் புகார் மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து வனவர், வனக்காவலர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதின் பேரில் வனவர் திருமுருகன், வனக்காவலர் ஜார்ஜ்குட்டி என்ற பென்னியை போலீசார் கைது செய்தனர்.

    • வெடிவிபத்தில் சண்முகராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.
    • உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை :

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், பனையடிபட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் கண்டியாபுரத்தைச் சேர்ந்த சண்முகராஜ் (வயது 36) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

    இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

    • வெம்பக்கோட்டை ஒன்றியம் பனையடிப்பட்டி கிராமத்தில் ஜெயபால் என்பவருக்கு சொந்தமான ஜெயதர்ஷினி பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.
    • தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த வழக்கமான பணிகளை தொடங்கிய சண்முகராஜ், வெடி குழாய்களுக்குள் மருந்துகளை செலுத்திக் கொண்டு இருந்தார்.

    சிவகாசி:

    தீபாவளி பண்டிகை கடந்த மாதம் 12-ந்தேதி கொண்டாடப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டுக்கான பட்டாசு உற்பத்தியை சிவகாசி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இயங்கும் பட்டாசு ஆலைகள் தொடங்கியுள்ளன.

    நடந்து முடிந்த தீபாவளிக்கு ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசுகள் விற்பனையானது. அதனை இந்தாண்டு மிஞ்சும் வகையில் இருப்பதற்கான நடவடிக்கைகளில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டு தீபாவளிக்காக கடந்த மாதம் (நவம்பர்) 24-ந்தேதி பட்டாசு தயாரிப்பு பணியை ஆலைகள் மீண்டும் தொடங்கின.

    விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, செவல்பட்டி, ஏழாயிரம் பண்ணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பட்டாசு தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக வரப்போகும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை கருத்தில் கொண்டும் பட்டாசு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த பணிகள் பூஜைகளுடன் தொடங்கும்போதே அடுத்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு விற்பனை நன்றாக இருக்க வேண்டும், விபத்தில்லாமல் பட்டாசு ஆலைகளில் உற்பத்தி நடைபெற வேண்டும் என தொழிலாளர்கள் வேண்டிக்கொண்டனர். ஆனாலும் இன்று முதல் விபத்து நடந்துள்ளது. அது பற்றிய விபரம் வருமாறு:-

    சிவகாசி அருகே வெம்பக்கோட்டை ஒன்றியம் பனையடிப்பட்டி கிராமத்தில் ஜெயபால் என்பவருக்கு சொந்தமான ஜெயதர்ஷினி பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையானது மாவட்ட வெடிபொருள் கண்காணிப்பு துறை உரிமத்துடன் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை பனையடிப்பட்டி அருகேயுள்ள உட்கடை கண்டியாபுரம் கிராமத்தை சேர்ந்த பொம்மு ரெட்டியார் மகன் சண்முகராஜ் (வயது 36) என்பவர் முதல் நபராக பணிக்கு வந்தார்.

    தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த வழக்கமான பணிகளை தொடங்கிய சண்முகராஜ், வெடி குழாய்களுக்குள் மருந்துகளை செலுத்திக் கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக உராய்வு ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறின. அருகில் குவித்து வைக்கப்பட்டிருந்த வெடி மருந்தில் பற்றிய தீயானது அந்த கட்டிடம் முழுவதும் பரவியது.

    இதில் அந்த கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. அதன் இடிபாடுகளுக்குள் சிக்கிய சண்முகராஜ் உடல் நசுங்கி பலியானார். விபத்து குறித்த தகவல் அறிந்ததும் உடனடியாக விரைந்து வந்த ஏழாயிரம் பண்ணை தீயணைப்பு நிலைய அலுவலர் கண்ணன் தலைமையில் வந்த வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியிருந்த சண்முகராஜ் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பட்டாசு ஆலை விபத்தில் பலியான சண்முகராஜூக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இச்சம்பவம் குறித்து ஏழாயிரம் பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பட்டாசு ஆலை திறந்த சில நிமிடத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானதால் அப்பகுதி மக்களிடம் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

    • தோட்டத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து ஆய்வு செய்தனர்.
    • சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தர் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கூடலூர்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளாங்கோவிலை சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் பாலாஜி(19). இவர் ஈரோட்டில் உள்ள மோட்டார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். சென்னையை சேர்ந்த பாலகுமார் தேனி மாவட்டம் கூடலூர் அருகே பளியங்குடி பகுதியில் தென்னந்தோப்பு வைத்துள்ளார்.

    அந்த தோப்பிற்கு மோட்டார் பொருத்தும் பணிக்காக பாலாஜி மற்றும் பரமேஸ்வரன்(42) , பிரவீன்குமார்(20) ஆகிய 3 பேரும் வந்தனர். கடந்த சில நாட்களாக மோட்டார் பொருத்தும் பணி நடைபெற்றது. இந்தநிலையில் நேற்று பணி முடிந்த பின்னர் 3 பேரும் சாப்பிட சென்றனர். பின்னர் பரமேஸ்வரன் மற்றும் பிரவீன்குமார் ஆகியோர் திரும்பினர். ஆனால் பாலாஜி திடீரென மாயமானார்.

    இதனால் தோட்டத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து ஆய்வு செய்தனர். அதில் மீன் வளர்க்கும் தொட்டியில் பாலாஜி தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து லோயர்கேம்ப் போலீசார் மற்றும் கம்பம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பாலாஜியின் உடலை கைப்பற்றி கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தர் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கால்வாயில் தண்ணீர் வேகம் அதிகமாக இருந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலூர்:

    மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவாநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் விக்கி (வயது 35). தச்சு வேலை பார்த்து வரும் இவருக்கு திருமணமாகி ரூபிணிதேவி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

    நேற்று விடுமுறை நாள் என்பதால் விக்கி தனது வீட்டின் அருகே உள்ள நண்பர்களுடன் அழகர்கோவில் அருகே உள்ள கள்ளந்திரி பெரியாறு கால்வாயில் குளிக்க சென்றார். வைகை ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கால்வாயில் தண்ணீர் வேகம் அதிகமாக இருந்தது.

    இதனை உணராமல் விக்கி மற்றும் நண்பர்கள் கால்வாயில் குளித்தனர். கால்வாயில் நடுப்பகுதிக்கு சென்ற விக்கி நீண்ட நேரமாகியும் வெளியே வர வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் மற்றும் அங்கிருந்த சிலர் கால்வாயில் நீந்தி விக்கியை தேடி பார்த்தனர். ஆனால் எந்த பலனும் இல்லை.

    இதுகுறித்து அப்பன் திருப்பதி போலீசாருக்கும், தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் அபி கோவிந்தராஜ், தீயணைப்பு நிலைய அலுவலர் காதர் பாட்சா தலைமையிலான தீயணைப்பு மற்றும் கமாண்டோ படை வீரர்கள் சம்பவ இடம் வந்து விக்கியை தேடினர். ஆனால் அதற்குள் இருட்டிவிட்டதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

    இன்று காலை வீரர்கள் தேடும் பணியை தொடங்கினர். அப்போது கள்ளந்திரி கால்வாயில் இருந்து சில மீட்டர் தொலைவில் புதருக்கு இடையே விக்கி உடல் சிக்கி இருந்தது தெரியவந்தது. வீரர்கள் உடலை கைப்பற்றி கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அப்பன்திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சிகிச்சை பலனின்றி சண்முகம் பரிதாபமாக இறந்தார்.
    • பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் இருந்து பர்கூர் மலைப்பாதை வழியாக கர்நாடக மாநில த்திற்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது.

    இந்த சாலை வழியாக கர்நாடகாவிற்கு செல்வ தற்கு குறைந்த தூரம் என்பதாலும் வளைவுகள் குறைவு என்பதாலும் வாகன ஓட்டிகள் அதிக அளவில் இந்த வழித்தடத்தை பயன்ப டுத்தி வருகின்றார்கள்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கர்நாடகா மாநிலம் ராமாபுரம் பகுதியில் இருந்து தர்பூசணி பாரம் ஏற்றிக்கொண்டு பர்கூர் வழியாக வந்து கொண்டிருந்தது.

    இதில் 6 பேர் பயணம் செய்தார்கள். தொடர்ந்து வரட்ட பள்ளம் அணை வளைவு பகுதியில் சரக்கு வாகனம் வந்த போது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது.

    இதில் சென்னம்பட்டி சனிசந்தை சித்தகவண்ட னூர், மாரியப்பன் (47) பழனியம்மாள் (44) ராமாயி (45) செவன் (48) மாரிமுத்து (49) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

    கேரளா மாநிலம் திரு ச்சூர் மாவட்டம் கொடுங்க ல்லூர் ரியாஸ் (34) ஓட்டுன ருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    மேலும் சென்னம்பட்டி பூனர் நகர் பகுதியை சேர்ந்த சண்முகம் என்கின்ற குமார் (45) கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை சண்முகம் என்கின்ற குமார் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

    • உடுமலை அடுத்த சுண்டக்காம்பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன்
    • வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார்

    உடுமலை : 

    உடுமலை அடுத்த சுண்டக்காம்பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன்(வயது 52). இவர் வேலை நிமித்தமாக சென்று விட்டு நேற்று முன்தினம் மாலை வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.ஜி.வி.ஜி. கல்லூரி அருகே வந்த போது பழனியை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி ஈஸ்வரன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.இந்த விபத்து குறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • திருச்சியில் இருந்து கோயம்பேடு நோக்கி வந்த அரசு பஸ் திடீரென சரக்கு வேன் மீது பயங்கரமாக மோதியது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    கிண்டி, ஈக்காட்டுதாங்கல் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது34).இவர் மேற்கு ஜாபர்கான்பேட்டையில் உள்ள தனியார் பார்சல் சர்வீசில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார்.

    நேற்று நள்ளிரவு 1 மணிக்கு அவர் நிறுவனத்திற்கு வந்த பார்சல்களை விமானத்தில் அனுப்புவதற்காக சரக்கு வேனில் மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் நோக்கி வந்தார். வேனை டிரைவர் அம்ருதீன் ஓட்டினார். உடன் காவலாளி சுதேந்திரன் இருந்தார்.

    பழைய விமான நிலையம் நுழைவாயிலில் எதிரே உள்ள மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில் சிக்னலை கடக்க முயன்றபோது, திருச்சியில் இருந்து கோயம்பேடு நோக்கி வந்த அரசு பஸ் திடீரென சரக்கு வேன் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் சரக்கு வேன் நடுரோட்டில் கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த சூப்பர்வைசர் மணிகண்டன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் வேன் டிரைவர் அம்ருதீன், காவலாளி சுதேந்திரன் 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்தில் அரசு பஸ்சின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்து கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

    தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியான மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பலத்த காயம் அடைந்த சுரேந்திரன் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தங்கவேல் (55), தொழிலாளியான இவர் கடந்த 11-ந் தேதி இரவு இளம்பிள்ளையில் இருந்து சின்னப்பம்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • இளம்பிள்ளை நோக்கி வந்த அரசு பஸ் தங்கவேல் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் இடங்கணசாலை அருகே உள்ள கோணேரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (55), தொழிலாளியான இவர் கடந்த 11-ந் தேதி இரவு இளம்பிள்ளையில் இருந்து சின்னப்பம்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சின்னப்பம் பட்டியில் இருந்து இளம்பிள்ளை நோக்கி வந்த அரசு பஸ் தங்கவேல் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தங்கவேல் தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில் உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த பகுதியினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் ஆஸ்பத்திரியில் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். இந்த விபத்து குறித்து தங்கவேலுவின் மகன் கார்த்திக்கேயன் கொடுத்த புகாரின் பேரில் காகாபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×