செய்திகள்
முககவசம்

முககவசம் அணியாத 27 பேருக்கு அபராதம்

Published On 2020-07-01 12:04 GMT   |   Update On 2020-07-01 12:04 GMT
பட்டுக்கோட்டையில் முககவசம் அணியாத 27 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டையில் வட்ட வழங்கல் அலுவலர் பாஸ்கரன், நகராட்சி நகரமைப்பு அலுவலர் கருப்பையன் மற்றும் போலீசார் கடை தெருவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு கடைகளில் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் முககவசம் அணியாமல் வியாபாரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து உரிமையாளர்கள், ஊழியர்கள் என மொத்தம் 27 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைபிடிக்காத 2 கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.300 அபராதம் விதிக்கப்பட்டது.
Tags:    

Similar News