செய்திகள்
கைது

நாமக்கல் அருகே கஞ்சா விற்ற பெண் கைது

Published On 2020-06-28 11:12 GMT   |   Update On 2020-06-28 11:12 GMT
நாமக்கல் அருகே கஞ்சா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:

நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் நேற்று சுண்ணாம்புகார தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த ஒரு பெண்ணை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த சரவணன் மனைவி தமிழ்செல்வி (வயது 35) என்பது தெரியவந்தது. இதையடுத்து தமிழ்செல்வியிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News