செய்திகள்
உயிரிழப்பு

கோவில்பட்டியில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி

Published On 2020-06-27 16:19 GMT   |   Update On 2020-06-27 16:19 GMT
கோவில்பட்டியில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் செல்லிமுத்து (வயது 29). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவில் கோவில்பட்டி மில் தெருவில் உள்ள கடையின் மாடியில் நின்று கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது அவர் இரும்பு கம்பியை உயர்த்தி பிடித்தபோது, அங்குள்ள உயர் அழுத்த மின்கம்பியில் எதிர்பாராதவிதமாக உரசியது.

இதில் செல்லிமுத்து மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். உடனே அவரை சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News