செய்திகள்
கோவை அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது
கோவை அருகே கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை வெறைட்டிஹால் ரோடு போலீசார் இடையர்வீதி-சாமி அய்யர் தெரு சந்திப்பில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்தின் பேரில் நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் அதில் 200 கிராம் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த விக்ரம்(வயது 40) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல சாய்பாபா காலனி ஜீவாநகரில் கஞ்சா வைத்திருந்ததாக சதீஷ்குமார்(வயது 20), கவுண்டம்பாளையத்தை சேர்ந்த டேனியல்(23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை வெறைட்டிஹால் ரோடு போலீசார் இடையர்வீதி-சாமி அய்யர் தெரு சந்திப்பில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்தின் பேரில் நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் அதில் 200 கிராம் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த விக்ரம்(வயது 40) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல சாய்பாபா காலனி ஜீவாநகரில் கஞ்சா வைத்திருந்ததாக சதீஷ்குமார்(வயது 20), கவுண்டம்பாளையத்தை சேர்ந்த டேனியல்(23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.