செய்திகள்
மரணம்

திருமங்கலத்தில் மனைவியை பிரிந்த டிரைவர் மர்ம மரணம்

Published On 2020-06-06 06:58 GMT   |   Update On 2020-06-06 06:58 GMT
திருமங்கலத்தில் மனைவியை பிரிந்த டிரைவர் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகத்சிங் தெருவைச் சேர்ந்தவர் பாலதண்டாயுதபாணி (வயது53), தனியார் பஸ் டிரைவர். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு ஹரி, சரண்யா என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சாந்தி தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு பிரிந்து சென்றார். இதனால் பாலதண்டாயுதபாணி மட்டும் தனியாக வசித்து வந்தார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 3 மாதங்களாக வேலையில்லாமல் இருந்ததால் பாலதண்டாயுதபாணி வீட்டிலேயே முடங்கி கிடந்தார். தனிமையில் இருந்த அவருக்கு வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாலதண்டாயுதபாணி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். அதன் பின்னர் அவர் வெளியே வர வில்லை.

அக்கம் பக்கத்தினர் பாலதண்டாயுதபாணி வெளியே சென்றிருக்கலாம் என நினைத்திருந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது பாலதண்டாயுதபாணி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது.அதனை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தி காரணமாக பாலதண்டாயுதபாணி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அதிக அளவு மது குடித்ததால் இறந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News