செய்திகள்
விருதுநகர் அருகே விபத்தில் வாலிபர் பலி
விருதுநகர் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது 33). நேற்று இவர் மோட்டார் சைக்கிளில் விருதுநகர் ஆர்.ஆர்.நகர் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர் எதிர்பாராதவிதமாக சாலையில் இருந்த தடுப்பு சுவர் மீது மோதினார். இதில் சம்பவ இடத்திலேயே சுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.