செய்திகள்
கைது

வீட்டில் சாராயம் காய்ச்சியவர் கைது

Published On 2020-04-28 13:10 GMT   |   Update On 2020-04-28 13:10 GMT
டி.கல்லுப்பட்டி அருகே வீட்டில் சாராயம் காய்ச்சியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரையூர்:

டி.கல்லுப்பட்டி போலீசார் நரசிங்காபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதே ஊரை சேர்ந்த பாஸ்கரன்(வயது 45) என்பவர் தனது வீட்டின் முன்பு சாக்கு பையுடன் நின்று கொண்டிருந்தார். போலீசாரை பார்த்தவுடன் தப்பி ஓட முயன்றார். அவரை பிடித்து விசாரித்தனர்.

மேலும் அவர் வைத்திருந்த சாக்கு பையை பிரித்து பார்த்தபோது அதில் பிளாஸ்டிக் கேன் ஒன்றில் 4 லிட்டர் சாராயம் இருந்தது. விசாரணையில் பாஸ்கரன் அவரது வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்ய கொண்டு சென்றதாக கூறினார். இதைதொடர்ந்து போலீசார் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் பாஸ்கரனை கைது செய்தனர்.
Tags:    

Similar News