செய்திகள்
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் பரிசோதனை மையம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
திருநெல்வேலி அரசு பொதுமருத்துவமனையில் புதியதாக கொரோனா வைரஸ் பரிசோதனை மையம் விரைவில் அமைக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
சென்னை:
சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது பாளையங்கோட்டை தி.மு.க. தொகுதி எம்.எல்.ஏ. பேசினார்.
அவர் பேசும்போது, “திருநெல்வெலி மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் குடிநீர் மற்றும் பொது சுகாதார வசதியை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா?” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-
தாமிரபரணி ஆற்றுப்படுகையிலிருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு 6.30 கோடி ரூபாய் செலவில் மேல்நிலைத் நீர்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு அதன் மூலம் சீரான குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
மேலும் தென் தமிழகத்தில் சிறந்து விளங்ககூடிய மருத்துவமனையான திருநெல்வேலி அரசு பொதுமருத்துவமனையில் புதியதாக கொரோனா வைரஸ் பரிசோதனை மையம் அமைக்க அரசு ஒப்புதல் வழங்கியிருப்பதாகவும் விரைவில் மையம் அமைக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது பாளையங்கோட்டை தி.மு.க. தொகுதி எம்.எல்.ஏ. பேசினார்.
அவர் பேசும்போது, “திருநெல்வெலி மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் குடிநீர் மற்றும் பொது சுகாதார வசதியை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா?” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-
தாமிரபரணி ஆற்றுப்படுகையிலிருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு 6.30 கோடி ரூபாய் செலவில் மேல்நிலைத் நீர்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு அதன் மூலம் சீரான குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
மேலும் தென் தமிழகத்தில் சிறந்து விளங்ககூடிய மருத்துவமனையான திருநெல்வேலி அரசு பொதுமருத்துவமனையில் புதியதாக கொரோனா வைரஸ் பரிசோதனை மையம் அமைக்க அரசு ஒப்புதல் வழங்கியிருப்பதாகவும் விரைவில் மையம் அமைக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.