செய்திகள்
கைது

வத்தலக்குண்டு அருகே வைக்கோல் படப்புக்கு தீ வைத்த 2 பேர் கைது

Published On 2020-03-11 09:37 GMT   |   Update On 2020-03-11 09:37 GMT
வத்தலக்குண்டு அருகே வைக்கோல் படப்புக்கு தீ வைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வத்தலக்குண்டு:

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே ரெட்டியப்பட்டியில் பொது இடத்தில் கிராமத்தினர் கால்நடைகளுக்கு தேவையான தீவனங்கள் மற்றும் வைக்கோல் படப்பு வைத்திருந்தனர். இங்கு திடீரென தீப்பற்றி வைக்கோல் படப்பு முழுவதுமாக பற்றி எரிந்து நாசமானது.

இது குறித்து சுரேஷ் மற்றும் கிராமத்தினர் வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் முன்விரோதம் காரணமாக வைக்கோல் படப்புக்கு தீ வைத்தது தெரியவந்தது.

அதே பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி, அமுல்துரை ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக ரமேஷ், அஜித், டென்னீஸ், ராஜபாண்டி ஆகிய 4 பேரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News