செய்திகள்
திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் படத்திறப்பு நிகழ்ச்சி 14-ந்தேதி நடக்கிறது
மறைந்த தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் படத்திறப்பு நிகழ்ச்சி வருகிற 14-ந்தேதி சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெறுகிறது.
சென்னை:
மறைந்த தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் படத்திறப்பு நிகழ்ச்சி வருகிற 14-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணிஅளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெறுகிறது. தி.க. தலைவர் கி.வீரமணி தலைமை தாங்குகிறார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அன்பழகன் திருவுருவப்படத்தை திறந்து வைப்பார்.
பொருளாளர் துரைமுருகன் முன்னிலை வகிக்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காதர்மொகிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் பலர் நினைவேந்தல் உரையாற்றுகின்றனர்.
மறைந்த தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் படத்திறப்பு நிகழ்ச்சி வருகிற 14-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணிஅளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெறுகிறது. தி.க. தலைவர் கி.வீரமணி தலைமை தாங்குகிறார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அன்பழகன் திருவுருவப்படத்தை திறந்து வைப்பார்.
பொருளாளர் துரைமுருகன் முன்னிலை வகிக்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காதர்மொகிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் பலர் நினைவேந்தல் உரையாற்றுகின்றனர்.