செய்திகள்
விபத்து

நல்லம்பள்ளி அருகே இன்று லாரி மோதி டிரைவர் பலி

Published On 2020-02-26 12:56 GMT   |   Update On 2020-02-26 12:56 GMT
நல்லம்பள்ளி அருகே இன்று அதிகாலை லாரி மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இண்டூர்:

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து கேரளா நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று புறப்பட்டது. லாரியை கேரளாவை சேர்ந்த டிரைவர் சுமிஸ் (வயது 32) என்பவர் ஓட்டி வந்தார்.

சுமிஸ் மட்டும் பயணித்துவந்த இந்த கண்டெய்னர் லாரி இன்று அதிகாலை தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த வெங்களாபுரம் அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்றுகொண்டிருந்த லாரி மீது கண்டெய்னர் லாரி எதிர்பாராத விதமாக மோதியது. விபத்தில் கண்டெய்னர் லாரி டிரைவர் சுமிஸ் பரிதாபமாக உயிர் இழந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுமிஸ்சின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News