செய்திகள்
விபத்து காயம்

நாங்குநேரி அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதி 2 பேர் படுகாயம்

Published On 2020-02-25 09:00 GMT   |   Update On 2020-02-25 09:00 GMT
நாங்குநேரி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

களக்காடு:

வள்ளியூர் அருகே உள்ள குமார புதுக்குடியிருப்பை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 48) விவசாயி. சம்பவத்தன்று இவரும், இவரது உறவினர் முருகனும், நெல்லை அருகே உள்ள ஆரைகுளத்திற்கு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர். நாங்குநேரி நான்குவழிச் சாலையில் தனியார் மில் அருகே சென்ற போது பைக்கிற்கு முன்னால் சென்ற லாரி திடீர் என இடது பக்கம் திரும்பியதாக கூறப்படுகிறது. இதனால் பைக்கும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பைக்கில் சென்ற முத்துகிருஷ்ணனும், அவரது உறவினர் முருகனும் படுகாயமடைந்தனர். அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் 2 பேரும் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து புகாரின் பேரில் நாங்குநேரி போலீசார் லாரி டிரைவர் திருப்பத்தூர் அருகே உள்ள சென்னராம்பட்டியை சேர்ந்த சின்னப்பன் மகன் சுகுமார் (42) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News