செய்திகள்
முதல்வர் பழனிசாமி பேசிய காட்சி.

நான் ஒரு விசித்திரமான ஒரு விவசாயிதான்- முதல்வர் பழனிசாமி பேச்சு

Published On 2020-02-24 14:24 GMT   |   Update On 2020-02-24 14:24 GMT
சேலத்தில் நடந்த ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர், நான் ஒரு விசித்திரமான ஒரு விவசாயிதான் என தெரிவித்தார்.
சேலம்:

சேலத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

சேலத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டடுக்கு மேம்பாலம் இன்னும் ஒரு மாதத்தில் திறக்கப்படும். மருத்துவத்துறையில் பல்வேறு சாதனை சகாப்தங்களை தமிழக அரசு படைத்து வருகிறது. 

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், விவசாயிகளை கொச்சைப்படுத்திப் பேச வேண்டாம். ஸ்டாலினின் பிரசாரத்திற்கு விளக்கமளிக்கும் விதமாக திட்டங்களை பட்டியலிட்டு காட்டியுள்ளோம். 

அதிமுக அரசு திட்டங்களில் ஏதேனும் குறைகள் இருந்தால் ஸ்டாலின் சொல்லட்டும். விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாத எதிர்க்கட்சி தலைவர் தமிழகத்தில் உள்ளார். 

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பேன் என ஸ்டாலின் எதிர்ப்பார்க்க வில்லை. விவசாயிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் நான் ஒரு விசித்திர விவசாயிதான். விசித்திர விவசாயி என என்னை ஸ்டாலின் பாராட்டியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News