செய்திகள்
அரசின் கடன் குறித்து திமுக கவலைப்பட வேண்டாம்- துரைமுருகனுக்கு முதலமைச்சர் பதில்
தமிழக அரசின் கடன் குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் சட்டசபையில் பேசியதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் குறித்தும் அரசின் கடன் சுமை குறித்தும் திமுக பொருளாளர் துரைமுருகன் பேசியதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.
தமிழக அரசின் கடன் குறித்து திமுக கவலைப்படவேண்டாம் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, தற்போதுள்ள ரூ.4 லட்சம் கோடி கடன் என்பது, 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ரூ.1 லட்சம் கோடிக்கு சமம் என்றார்.
மேலும், விடுபட்ட அனைவருக்கும் பயிர்க்காப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் உறுதி அளித்தார்.