செய்திகள்
கையெழுத்து படிவங்களை டெல்லிக்கு அனுப்பிய திமுக கூட்டணி தலைவர்கள்

சிஏஏ சட்டத்துக்கு எதிரான கையெழுத்து படிவங்கள் டெல்லிக்கு அனுப்பி வைப்பு

Published On 2020-02-16 08:13 GMT   |   Update On 2020-02-16 08:13 GMT
திமுக சார்பில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பெறப்பட்ட கையெழுத்து படிவங்கள் இன்று டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
சென்னை:

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தி.மு.க. கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது. இதன் நிறைவு விழா திருவள்ளூரில் நடந்தது.

அப்போது பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெறவேண்டும் என்று முடிவு செய்து இப்பணியை தொடங்கினோம். ஆனால் கையெழுத்து படிவத்தின் எண்ணிக்கை 2 கோடியைத் தாண்டிவிட்டது. மக்கள் உண்மைகளை புரிந்துகொண்டு இந்த கொடுமைகளை தெரிந்துகொண்டு அவர்களாகவே முன்வந்து கையெழுத்துகளை போட்டுள்ளனர் என குறிப்பிட்டார்.

இந்நிலையில், திமுக சார்பில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பெறப்பட்ட கையெழுத்து படிவங்கள் இன்று டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். கையெழுத்து பெற்ற படிவங்கள் வரும் 19-ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் ஒப்படைக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News