இந்தியா

திருமண கோலத்தில் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்றிய மணமகன்

Published On 2024-04-26 03:08 GMT   |   Update On 2024-04-26 03:08 GMT
  • மகாராஷ்டிரா மாநிலத்தில் 2-ம் கட்டமாக 8 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
  • திருமண விழா முக்கியமானது தான் ஆனால் வாக்களிப்பதும் முக்கியம்.

மகாராஷ்டிரா:

இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

அந்தவகையில் கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், மணிப்பூர், திரிபுரா, காஷ்மீர் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடக்கிறது.

2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 2-ம் கட்டமாக 8 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க திருமண கோலத்தில் மணமகன் ஆகாஷ், அமராவதியின் வதர்புரா பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியபோது,

திருமண விழா முக்கியமானது தான் ஆனால் வாக்களிப்பதும் முக்கியம். இன்று மதியம் 2 மணிக்கு திருமணம் நடைபெற உள்ளது என்று கூறினார். 


Tags:    

Similar News