தமிழ்நாடு

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் பல வண்ண மலர்கள்- சுற்றுலா பயணிகள் உற்சாகம்

Published On 2024-04-26 03:53 GMT   |   Update On 2024-04-26 03:53 GMT
  • ஆஸ்டர், மேரி கோல்டு, பேன்சி வகைகள், பெட்டுன்னியா, குட்டை ரக சால்வியா, கேலண்டுல்லா, பிளாக்ஸ், டேலியா மற்றும் ரோஜா உள்ளிட்ட பூக்கள் ம‌ல‌ர் ப‌டுகைக‌ளில் பூக்க‌த் தொடங்கியுள்ளது.
  • சுற்றுலா பயணிகள் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் பல வண்ண மலர்களை ஆர்வமுடன் கண்டு ரசித்து அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் ஏப்ரல், மே மாதங்கள் சீசன் காலங்களாகும். இந்த காலக்கட்டத்தில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்க நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள பிரையண்ட் பூங்காவில் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.

இந்த வருடம் 61வது மலர்கண்காட்சி நடைபெற உள்ளதால் பூங்கா நிர்வாகத்தினர் அதற்கான பராமரிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு 3 கட்டமாக ஊட்டி, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட முக்கிய பெருநகரங்களில் சுமார் 2½ லட்சம் மலர் நாற்றுகள் வரவழைக்கப்பட்டு நடவு செய்யப்பட்டது. அந்த நாற்றுகள் தற்போது பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளது. இதில் சால்வியா,பாப்பி, டெல்பினியம், ஆஸ்டர், மேரி கோல்டு, பேன்சி வகைகள், பெட்டுன்னியா, குட்டை ரக சால்வியா, கேலண்டுல்லா, பிளாக்ஸ், டேலியா மற்றும் ரோஜா உள்ளிட்ட பூக்கள் மலர் படுகைகளில் பூக்கத் தொடங்கியுள்ளது.

இது பார்ப்பவர்களின் கண்களை கவரும் வகையிலும் அமைந்துள்ளது. மேலும் வரும் வாரங்களில் லட்சக்கணக்கான பூக்கள் பூத்து குலுங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பல வண்ணங்களில், பல்வேறு வகைகளில் பூக்கள் பூத்து குலுங்க தொடங்கியுள்ளது. கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் பல வண்ண மலர்களை ஆர்வமுடன் கண்டு ரசித்து அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

மேலும் மலர்கண்காட்சி நடைபெறும் தேதி அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என தோட்டக்கலை துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News