செய்திகள்
தற்கொலை

சேடப்பட்டி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

Published On 2020-02-13 10:15 GMT   |   Update On 2020-02-13 10:15 GMT
சேடப்பட்டி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமங்கலம்:

சேடப்பட்டி போலீஸ் சரகத்திற்குட்பட்ட அயோத் திப்பட்டி காலனியைச் சேர்ந்தவர் தினேஷ்வரன், தொழிலாளி. இவரது மனைவி மகாலட்சுமி (23).

இவர்கள் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளனர். இந்த நிலையில் சில மாதங்களாக இருவருக்கும் கருத்து வேறுபாடு உருவானது.

இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்றும் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் உருவானது.

இதில் மனவேதனை அடைந்த மகாலட்சுமி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

சேடப்பட்டி போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆவதால் கோட்டாட்சியர் விசாரணையும் நடக்கிறது.

Tags:    

Similar News