செய்திகள்
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி இன்று தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி:
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி இன்று தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டார். இவர் மீது ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் 2 கொலை வழக்கு உள்ளது. நெல்லை மாவட்ட போலீஸ் நிலையத்திலும் அந்த ரவுடி மீது கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. மேலும் கூலிப்படையிலும் இந்த ரவுடிக்கு தொடர்பு இருந்துள்ளது.
இதனால் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட போலீசார் ரவுடியை தேடிவந்தனர். இந்நிலையில் இன்று அவரை கைது செய்தனர். அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.