செய்திகள்
கைது

கிருஷ்ணகிரி: புகையிலை பொருட்களை வைத்திருந்த 6 பேர் கைது

Published On 2020-02-07 17:07 GMT   |   Update On 2020-02-07 17:07 GMT
கிருஷ்ணகிரி பகுதி பெட்டி கடைகளில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது புகையிலை பொருட்களை வைத்திருந்த 6 பேரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் உள்ள பெட்டி கடைகளில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். 

அதன்படி, பையனப்பள்ளி சீமான்(48), சோக்காடி சுரேஷ்(34), எம்.டி.வி. நகர் சிவக்குமார் (47), சின்னேப்பள்ளி தேவேந்திரன் (39), களர்பதி ஏகாம்பரம்(36), அதேபகுதியை சேர்ந்த அச்சுதன்(34) ஆகிய 6 பேரையும் கைது செய்து, அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News