செய்திகள்
எம்.ஜி.ஆர். நகரில் மோட்டார் சைக்கிள் திருடிய கொள்ளையன் கைது
சென்னை எம்.ஜி.ஆர். நகரில் மோட்டார் சைக்கிள் திருடிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
போரூர்:
எம்.ஜி.ஆர். நகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் வீட்டை பூட்டி விட்டு சாவியை ஜன்னல் ஓரமாக மறைத்து வைத்துவிட்டு வேலைக்கு செல்பவர்களின் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் சம்பவம் அதிக அளவில் நடந்து வந்தது. மேலும் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள்களும் தொடர்ந்து திருடு போனது.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் மற்றும் போலீசார் கொள்ளை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளையில் ஈடுபட்டது கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் (45) என்பது தெரிந்தது.
எனவே தலைமறைவாக இருந்த ஸ்ரீதரை போலீசார் நேற்று கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவனிடம் இருந்து 6 கிராம் தங்க நகை 275 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 7 சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
எம்.ஜி.ஆர். நகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் வீட்டை பூட்டி விட்டு சாவியை ஜன்னல் ஓரமாக மறைத்து வைத்துவிட்டு வேலைக்கு செல்பவர்களின் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் சம்பவம் அதிக அளவில் நடந்து வந்தது. மேலும் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள்களும் தொடர்ந்து திருடு போனது.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் மற்றும் போலீசார் கொள்ளை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளையில் ஈடுபட்டது கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் (45) என்பது தெரிந்தது.
எனவே தலைமறைவாக இருந்த ஸ்ரீதரை போலீசார் நேற்று கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவனிடம் இருந்து 6 கிராம் தங்க நகை 275 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 7 சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.