செய்திகள்
பெண் பலி

சிவகாசி அருகே பட்டாசு வெடி விபத்தில் பெண் தொழிலாளி பலி

Published On 2019-12-10 10:12 GMT   |   Update On 2019-12-10 10:12 GMT
சிவகாசி அருகே பட்டாசு வெடி விபத்தில் தீக்காயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

விருதுநகர்:

சிவகாசி அருகே உள்ள இ.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 45). இவர் முறையான அனுமதியின்றி வீட்டிலேயே பட்டாசு தயாரித்து வந்ததாக தெரிகிறது.

நேற்று இவரது வீட்டில் அதே பகுதியைச் சேர்ந்த அம்பிகா (வயது 42) உள்பட 4 பெண்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டனர்.

வெடி மருந்தை நிரப்பும் போது உராய்வு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. கண் இமைக்கும் நேரத்தில் அருகில் இருந்த பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கின.

இந்த விபத்தில் அம்பிகா சிக்கி தீக்காயம் அடைந்தார். மற்றவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். உயிருக்கு போராடிய அம்பிகாவை அந்தப்பகுதியினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அம்பிகா பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News