செய்திகள்
தற்கொலை

விபத்தில் காயம் அடைந்த அவதியால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2019-12-05 12:24 GMT   |   Update On 2019-12-05 12:24 GMT
விபத்தில் காயம் அடைந்து அவதி அடைந்து வந்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:

புதுவை மூலகுளம் ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களது மகன் ரோபர் (வயது 23). இவர் புதுவை காமராஜர் சாலையில் உள்ள சினிமா தியேட்டரில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரோபர் விபத்தில் சிக்கி தலையில் காயம் அடைந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். விபத்தில் தலையில் ஏற்பட்ட காயத்தால் ரோபர் அவதி அடைந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் விரக்தியில் இருந்து வந்தார். 

விரக்தியில் இருந்து மீள ரோபரை அவரது தாய் சரஸ்வதி முதலியார்பேட்டை அனிதா நகரில் உள்ள தனது மகள் வீட்டில் தங்க வைத்திருந்தார். 

இந்த நிலையில் சம்பவத்தன்று ரோபருக்கு தலையில் வலி அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரோபர் தனது அக்காள் வீட்டில் வைத்திருந்த தரையை சுத்தம் செய்ய வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில், மயங்கி விழுந்த ரோபரை அவரது அக்காள் குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரோபர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News