செய்திகள்
சீமான்

ரஜினிகாந்த் எனும் பிம்பம் தூள் தூளாகும் அதிசயம், அற்புதம் 2021ல் நடக்கும்- சீமான்

Published On 2019-11-21 12:46 GMT   |   Update On 2019-11-21 12:46 GMT
நடிகர் ரஜினிகாந்த் எனும் பிம்பம் தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம், அற்புதம் 2021ல் நடந்தே தீரும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை:

கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் கூறியதாவது:

கமலுடன் கூட்டணி அமைத்தால் யாருக்கு அதிகாரம் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.

தமிழகத்தில் ஆன்மிக அரசியல் எடுபடாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளது பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் தமிழக மக்கள் மிகப்பெரிய அதிசயத்தையும், அற்புதத்தையும் நிகழ்த்திக் காட்டுவார்கள் என தெரிவித்தார்.

இதற்கிடையே, தூத்துக்குடியில் பேட்டி அளித்த முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எந்த அடிப்படையில் அதிசயம் நிகழும் என ரஜினி கூறுகிறார் என தெரியவில்லை. 2021-ல் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என ரஜினி கூறியிருக்கலாம் என்று கூறியிருந்தார். 

இந்நிலையில், ரஜினி கூறிய கருத்து குறித்து சீமான் டுவிட் செய்துள்ளார். அவர் கூறியதாவது:-

நடிகர் ரஜினிகாந்த் எனும் பிம்பம் தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம், அற்புதம் 2021-ல் நடந்தே தீரும் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News