முத்துப்பேட்டை அருகே விபத்து- 4 பேர் படுகாயம்
முத்துப்பேட்டை:
புதுச்சேரியை சேர்ந்தவர் முகமது ரபிக்(45). இவர் தனது மனைவி நிசார்பானு, தாயார் பரிஜஹான், மகன் அர்ஷத் ஆகியோர் நேற்று திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டு துக்கத்திற்கு சென்று விட்டு இன்று அதிகாலை புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றனர். காரை முகமதுரபிக் ஓட்டினார்.
முத்துப்பேட்டை அடுத்த எடையூர் கிழக்கு கடற்க்கரை சாலையில் திருத்துறைப்பூண்டியை நோக்கி கார் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது அப்பகுதி பெட்ரோல் பங்கு அருகே கார் திடீரென்று நிலைதடுமாறி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் வாய்க்காலில் பாய்ந்து கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் காரில் இருந்த அனைவரும் சிறுசிறு காயங்களுடன் அப்பகுதியினரால் மீட்கப்பட்டனர். இதில் வாய்க்காலில் அதிகளவில் தண்ணீர் இல்லாததால் அனைவரும் உயிர் அதிர்ஷ்டவசமாக தப்பினர். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற எடையூர் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.