செய்திகள்
கைது

புளியரை அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

Published On 2019-10-29 11:42 GMT   |   Update On 2019-10-29 11:42 GMT
புளியரை அருகே விவசாயிக்கு கொலைமிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

புளியரை அருகே உள்ள தெற்குமேடு அங்கன்வாடி பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி பார்வதி(வயது 42). கருப்பசாமியின் சகோதரர் சுப்பையா. சகோதரர்கள் இருவருக்கும் நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது.

இந்நிலையில் சம்பவத்தன்று சுப்பையாவுக்கும், கருப்பசாமிக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சுப்பையா மண்வெட்டியால் கருப்பசாமியை பலமாக தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தார். இதில் கருப்பசாமி பலத்த காயம் அடைந்தார்.

இதுகுறித்து கருப்பசாமியின் மனைவி பார்வதி அளித்த புகாரின் பேரில் புளியரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து சுப்பையாவை கைது செய்தார்.

Tags:    

Similar News